போலீஸ் சுட்டு இளைஞர் பலி: கொலை வழக்காக பதிவு செய்யக் கோரி நல்லகண்ணு, வைகோ உண்ணாவிரதம்
திருநெல்வேலி: நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி கிராமத்தில் வானுமாமலை என்ற இளைஞரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொன்றதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் இன்று கண்டன உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
குளத்து மண்ணை அள்ளுவது தொடர்பாக விசாரணைக்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், வானுமாமலை என்ற இளைஞரை கடந்த 24-ந் தேதி சுட்டுக் கொன்றார். இச்சம்பவம் நாங்குநேரில் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 2 நாட்களாக கடைகள் மூடப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டன.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருடன் மறுகால்குறிச்சி கிராமத்துக்குச் சென்ற இப்ராகிம், செல்வின் செல்வகுமார் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஆனால் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மறுகால்குறிச்சி கிராமமக்கள் சார்பில் நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது
இப்போராட்டத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான இரா. நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி பழனி, பாஜக நிர்வாகி மகா கண்ணன், முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மைதீன் பாரூக் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் இதில் கலந்து கொண்டனர்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications