மெழுகு தட்டுப்பாடு: தீப்பெட்டி தொழில் பாதிப்பு- உற்பத்தியாளர்கள் கவலை

கந்தக பூமியான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டயபுரம், கழுகுமலை, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், ஏழாயிரம் பண்ணை ஆகிய இடங்களில் தீப்பெட்டி தொழில் நீண்ட காலமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் 2,500க்கும் மேற்பட்ட கையினால் செய்யப்படும் தீப்பெட்டி கம்பெனிகளும், 300க்கும் மேற்பட்ட பகுதி இயந்திர தீப்பெட்டி கம்பெனிகளும் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் 6 லட்சம் பேர் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். இதில் 90 சதவீதம் பேர் பெண்கள். தமிழகத்தில் தயாரிக்கும் தீப்பெட்டி பி்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தற்போது தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களான மெழுகு, அட்டை, வஜ்ஜிரம் பொட்டாசியம் குளோரைடு, குச்சி போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதிகம் செலவழித்து தீப்பெட்டி உற்பத்தி செய்தாலும் சந்தையில் 600 தீப்பெட்டிகள் கொண்ட பண்டல் ஒன்று ரூ.200க்கு விற்கப்படுகிறது. மூலப்பொருட்களில் முக்கியமான மெழுகை சென்னையில் இயங்கி வரும் மெழுகு உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து வாங்கி சிட்கோ மூலம் தென்தமிழக தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது.
இம்மெழுகை கிலோ ரூ.60க்கு உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்து வருகின்றனர். இயந்திரங்கள் பழுதால் சென்னையில் உள்ள நிறுவனத்தில் குறைந்த அளவே மெழுகு உற்பத்தி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு போதிய அளவில் மெழகு சப்ளை செய்ய முடியவில்லை. தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக வெளிமார்க்கெட்டில் இருந்து மெழுகை கிலோவுக்கு ரூ.100 கொடுத்து வாங்குகின்றனர்.
இங்கிருந்து தீப்பெட்டி வாங்கும் வடமாநிலங்களில் பருவ மழை தொடங்கியுள்ளதால் பண்டல்கள் இருப்பு வைக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் அங்கு தீப்பெட்டி தேவையும் சற்று குறைந்துள்ளது. இத்தைகய நெருக்கடியான சூழ்நிலையில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வங்கிக் கடன், மின்கட்டண உயர்வு, லாரி வாடகை, கூலி உயர்வு போன்றவற்றால் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் தென்தமிழகத்தில் தீப்பெட்டி தயாரிப்பதற்கு தேவையான மெழுகு சீராக கிடைக்க வேண்டுமென்றால் வெளிநாடுகளுக்கு மெழுகை ஏற்றுமதி செய்வதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications