வடமாநிலங்களில் வெள்ளம்: 36 பேர் பலி, 50 பேர் மாயம்
டேராடூன்: வடமாநிலங்களான உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கு 36 பேர் பலியாகியுள்ளனர், 50 பேரைக் காணவில்லை.
வடமாநிலங்களான உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள கங்கை, யமுனை, சாரதா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மாவி என்ற இடத்தில் யமுனை ஆற்றிலே அபாய அளவைத் தாண்டி வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த வெள்ளத்தால் உத்தரகண்ட் மாநிலத்தில் குறைந்தது 12 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பகுதி வெள்ளித்தில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் உத்தரகாசி மற்றும் சமோலி ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதில் பல வீடுகள் தரைமட்டமாகின. இதில் 34 பேர் பலியாகினர். மீட்பு பணிகளை மேற்கொள்ள ராணுவத்தின் உதவி கோரப்பட்டது.
அஸ்சி கங்கா நீர்மின் திட்டத்தில் பணியாற்றிய 23 தொழிலாளர்கள் மாயமாகினர். அவர்கள் இறந்துவி்ட்டதாக அறிவிக்கப்பட்டதால் அவர்களையும் சேர்த்து தான் பலி எண்ணிக்கை 34 ஆனது. மேலும் 50 பேரைக் காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இமாச்சல பிரதேசம் மாநிலம் குல்லு மாவட்டத்தில் உள்ள மனாலி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மனாலியில் உள்ள பல்வேறு முக்கியமான பாலங்கள், சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அங்கு மீட்பு படையினர் உள்ளூர் அதிகாரிகளின் உதவியோடு மக்களுக்கு உதவி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் பெய்த கனமழையால் செனாப், தாவி, உஜ் மற்றும் பசந்தர் ஆகிய ஆறுகளில் தண்ணீர் அபாய அளவைத் தொடும் அளவுக்கு ஓடுகிறது.
இந்த மூன்று மாநிலங்களிலும் அந்தந்த மாநில அரசுகள் மீட்பு பணியை முடுக்கிவிட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications