அரசியல் கட்சி துவங்கும் முடிவு ஹசாரேவுடையது தான்: அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி: ஊழலுக்கு எதிரான தங்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் முடிவு அன்னா ஹசாரேவுடையது தான் என்றும், அவரையும் தங்களையும் பிரிக்க சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஊழலை எதிர்த்து போராட குழு அமைத்த அன்னா ஹசாரே அண்மையில் தனது குழுவை கலைத்தார். லோக்பால் மசோதா குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவே குழு அமைக்கப்பட்டது. ஆனால் இனி அரசுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதால் குழுவை கலைப்பதாக ஹசாரே தெரிவித்தார். ஆனால் அன்னா குழுவின் முக்கிய உறுப்பினரான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் அரசியல் கட்சி துவங்குவது பிடிக்காமல் தான் ஹசாரே குழுவைக் கலைத்தார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து கெஜ்ரிவால் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
அன்னா அரசியல் கட்சி துவங்குவதற்கு எதிராக இருப்பதாகவும், குழுவினர் தான் அந்த முடிவை அவர் மீது திணிப்பதாகவும் பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. உண்மையில் அரசியல் கட்சி துவங்குவது ஹசாரேவின் முடிவு தான். அரசியல் கட்சி துவங்க அவர் தான் வழிகாட்டியாக இருந்தார். ஹசாரே அரசியல் கட்சி துவங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் கட்சியே துவங்க மாட்டோம். அரசியல் கட்சி துவங்குவதால் ஊழலை எதிர்த்து சிறப்பாக போராட முடியும் என்று நினைத்தால் நீங்கள் தாராளமாக துவங்கலாம் என்று ஹசாரே எங்களிடம் கூறினார் என்று தெரிவித்துள்ளார்.
அரசியலில் ஈடுபட மாட்டேன் என்றும் ஆனால் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கட்சி துவங்கினால் அதை ஆதரிப்பேன் என்றும் ஹசாரே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் டெல்லி சட்டசபை தேர்தலில் அன்னா குழுவினர் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications