மதுரை கிரானைட் "மலை முழுங்கிகளின்" பாஸ்போர்ட்டுகள் முடக்கம்
மதுரை: தமிழகத்தை உலுக்கிவரும் பல ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் குவாரிகள் முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வரும் கிரானைட் அதிபர்கள் 6 பேரின் பாஸ்போர்ட்டுகள் முடக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கிரானைட் குவாரிகளில் இன்று 13-வது நாளாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்களின் அளவு குறித்து மதிப்பிடப்பட்டு வருகிறது. தற்போது குவித்து வைக்கப்பட்டிருக்கும் கிரானைட் கற்களின் மதிப்பு மட்டும் ரூ50 ஆயிரம் கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதிரடி சோதனை
கிரானைட் அதிபர்கள் பி.ஆர்.பழனிச்சாமி, பெரியசாமி, நாகராஜ், பன்னீர்செல்வம் மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகளில் நேற்று அதிகாலை முதல் மாலை வரை அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 23 இடங்களில் நடத்தப்பட்ட இச்சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்ரப்பட்டன. இந்த சோதனையின் போது கணக்கில் வராத ரூ17 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.பிஆர்பி கிரானைட் குவாரி நிறுவனத்துக்கு சொந்தமான 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் பி.ஆர்.பி. கிரானைட்டின் அலுஅலகம் மற்றும் மேலூர் நகர திமுக பிரமுகர் முகமது இப்ராகிம்சேட்டின் வீடு ஆகியவற்றுக்கு சீல் வைக்கப்பட்டன. கனிம வளத்துறையில் உதவி இயக்குநராக பணியாற்றிய சண்முகவேல், பி.ஆர்.பி. கிரானைட்டின் ஆலோசகர் லோகநாதன், ஒலிம்பஸ் குவாரியின் பங்குதாரர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
பாஸ்போர்ட் முடக்கம்
தலைமறைவாக உள்ள பி.ஆர்.பழனிச்சாமி, அழகிரி மகன் துரை தயாநிதி உள்ளிட்ட 18 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இவர்களில் முக்கிய குற்றவாளிகளான 6 பேர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிடாமல் இருக்க அவர்களது பாஸ்போர்ட்டையும் முடக்க தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.,
சிக்கும் 30 அதிகாரிகள்
இதேபோல் கடந்த 1993-ம் ஆண்டு முதல் கிரானைட் முறைகேடு நடைபெற்று வருவதும் இதுவரையிலான விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதனால் கிரானைட் முறைகேட்டுக்கு துணையாக இருந்த கனிமவள அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் யார் யார் என்று பட்டியல் எடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 30 அதிகாரிகள் இதில் சிக்கியுள்ளனர். இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications