தேடப்படும் குற்றவாளி டக்ளஸின் இருப்பிடத்தை சுஷ்மா ஸ்வராஜ் மூலம் கண்டறியக் கோரி வழக்கு
சென்னை: இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இருப்பிடத்தை அவரை சந்தித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜிடம் விசாரித்து கண்டறிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த ஏ.இருளாண்டி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தங்கியிருந்தார். அப்போது நடைபெற்ற கொலை மற்றும் ஆள்கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக சென்னை மாஜிஸ்திரேட்டு மற்றும் செசன்சு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் நீண்ட காலமாக அவர் ஆஜராகவில்லை என்பதால் டக்ளஸ் தேவானந்தாவை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. எனவே அவர் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். இந்தநிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் சில எம்.பி.க்களுடன் 16.4.12 அன்று இலங்கை சென்றார். அங்கு நடந்த போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலையை கண்டறிவதற்காக அந்த குழு இலங்கைக்கு சென்றது. இலங்கை அதிபரையும் சந்திக்க அந்தக் குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். இந்தநிலையில் டக்ளஸ் தேவானந்தாவை, சுஷ்மா சுவராஜ் மற்றும் எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்துப் பேசியுள்ளனர். இது அவருக்கு மறைமுகமாக உதவுவது போன்ற நிகழ்வாகும். தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை சந்திப்பது குற்றம். எனவே இந்த குழுவினரை போலீசார் விசாரித்தால் டக்ளஸ் தேவானந்தாவின் இருப்பிடத்தை தெரிந்துகொள்ள முடியும். அவரை கைது செய்து வழக்கை எதிர்கொள்ளச் செய்ய முடியும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக உள்ள வழக்குகளோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்த நீதிபதி, இந்த மனுவுக்கு 8 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி உள்துறை செயலாளர், டி.ஜி.பி.க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications