இந்திய துறைமுகங்களில் முதலீடு செய்ய இலங்கை திடீர் ஆர்வம்- வேவு பார்க்க சதியா?
டெல்லி: இலங்கை அரசின் துறைமுக அதிகாரசபையானது இந்திய துறைமுக அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடு செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆனால் திடீரென இந்திய துறைமுகங்களில் இலங்கை முதலீடு செய்ய முன்வருவது பெரும் சந்தேகத்துக்குரியது என்றும் கப்பல்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் துறைமுகங்களுக்கு போட்டியாக இலங்கையின் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதில் சீனா அதிக அக்கறைகாட்டி வருகிறது. குறிப்பாக இலங்கையின் கொழும்பு மற்றும் அம்பந்தோட்டா துறைமுகங்களை சீனா கைப்பற்றி இருக்கிறது. இந்தியாவும் கூட யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை துறைமுகத்தை சீரமைக்க முன்வந்திருக்கிறது.
இந்த நிலையில் திடீரென இந்தியாவின் துறைமுகங்களில் குறிப்பாக இலங்கைக்கு போட்டியான துறைமுகங்களாகக் கருதப்படும் கேரள மாநிலத்தின் கொச்சி மற்றும் விழிஞ்சம் துறைமுகங்களில் முதலீடு செய்ய இலங்கை முன்வந்திருக்கிறது. இந்தத் துறைமுகங்களின் வளர்ச்சியானது இலங்கைக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தக் கூடியது. ஆனாலும் இந்த துறைமுகங்களை இலங்கை குறி வைப்பது ஏன் என்பதுதான் சந்தேகத்துக்குரியது என்கின்றனர் கப்பல்துறை அமைச்சக அதிகாரிகள்.
சீனாவுக்காக இந்தியாவை வேவுபார்க்கத்தான் இலங்கை இத்தகைய முதலீட்டுத் திட்டங்களை அரங்கேற்றுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இலங்கையில் இருந்து ஏற்கெனவே இந்தியாவின் கடற்படை தளங்களை வேவுபார்க்கும் வகையில் பாகிஸ்தான் வேவு தளம் அமைத்திருக்கிறது. இந்நிலையில் இந்தியாவுக்குள்ளே ஊடுருவுவது என்பதுதான் தேசப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகிவிடும் என்றும் உளவுத்துறையினர் எச்சரிக்கையும் விடுத்திருப்பதாகவும் டெல்லி தகவல்கள் கூறுகின்றன.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications