தூத்துக்குடியில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல்: மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பரவலாக பெய்து வருகிறது. சீதோஷண நிலை மாற்றம் காரணமாக காய்ச்சலும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏராளமானோர் காய்ச்சலுக்கு சிசிக்சை பெற்று வருகின்றனர்.
இதில் பல நோயாளிகளும் டைபாய்டு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் குழந்தைகள் தான் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட 10 பேரின் ரத்த மாதிரிகள், மருத்துவ பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மருத்துவ பரிசோதனை முடிவில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தூத்துக்குடி மாவட்ட சுகாதார துறையினர் உறுதி செய்துள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் இடையே அமைச்சர் செல்லப்பாண்டியன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு காய்ச்சல் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டு அறிந்தார். மேலும் இது குறித்து மருத்துவமனை 'டீன்' எட்வின் ஜோ, மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெபமணி, மாநகராட்சி கமிஷனர் மதுமதி ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications