For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலஸ்தீனம் மீது தரைவழித் தாக்குதலையும் தீவிரப்படுத்துகிறது இஸ்ரேல்

By Mathi
Google Oneindia Tamil News

Aerial attack
காசா: பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருக்கும் இஸ்ரேல் தற்போது தரைவழித் தாக்குதல்களையும் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறது.

காசாவிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் ராக்கெட் தாக்குதல்களை நடத்தியிருந்தனர். இதைத் தொடர்ந்து உக்கிரமான வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இதில் ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தளபதி ஜபாரி உயிரிழந்திருக்கிறார். நேற்று இரவு மட்டும் சின்னஞ்சிறிய ஹமாஸ் பிரதேசத்தில் 150 இடங்கள் மீது வான்வழியாக இஸ்ரேல் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இஸ்ரேலின் தாக்குதலில் குழந்தைகள் உட்பட மொத்தம் 18 பாலஸ்தீனியர்கள் பலியாகியிருப்பதாக கூறப்படுகிறது.

இஸ்ரேலுக்கு பதிலடியாக ஹமாஸ் இயக்கத்தினரும் ராக்கெட் தாக்குதல்களை அதிகரித்திருக்கின்றனர். நேற்று இரவு மட்டும் காசா பகுதியில் இருந்து 350 ராக்கெட்டுகளை இஸ்ரேல் பகுதிகளை நோக்கி வீசியிருக்கின்றனர். இவற்றில் 130 ராக்கெட்டுகளை இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.

இதனிடையே காசா பகுதிக்கு எகிப்து பிரதமர் ஹிசாம் நேரில் சென்று பாலஸ்தீனத்துக்கான ஆதரவைத் தெரிவிக்க இருக்கிறார். இதேபோல் தரைவழியிலான தாக்குதலைத் தீவிரப்படுத்து நோக்கத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினரை உஷார்படுத்தியிருக்கிறத் இஸ்ரேல்.

English summary
Israel's aerial bombardment of Gaza has intensified after it authorised the call-up of 30,000 army reservists, amid reports of a possible ground offensive.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X