ப.சி. குடும்பத்தின் மிரட்டல்- சென்னை முட்டுக்காடு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரவுடிகளை ஏவி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் மிரட்டியதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையை அடுத்த முட்டுக்காட்டு மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முட்டுக்காடு அருகே உள்ள கரிக்காட்டுக் குப்பம் கிராமத்தில் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்துவிட்டனர் என்பது ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மீதான மீனவர்கள் புகார். இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறையினரிடம் புகாரும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமையன்று சர்ச்சைக்குரிய ஆக்கிரமிப்பு தொடர்பாக அதிகாரிகள் சர்வே நடத்தினர். அப்போது ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் அப்பகுதியில் ஒன்று திரண்டு மீனவர்களை மிரட்டினர் என்று கூறப்படுகிறது.

ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் கொடுத்ததற்காக ரவுடிகளை விட்டு தங்களை மிரட்டுவதாக மீனவர்கள் புகார் கூறி நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இன்றும் முட்டுக்காடு பகுதி மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+