அப்சல் குருவின் கருணை மனு.. உள்துறை அமைச்சக பரிசீலனைக்கு அனுப்பினார் பிரணாப்
இதுகுறித்து அதிகார மட்டத்தில் கூறுகையில், தன்னிடம் நிலுவையில் உள்ள கருணை மனுக்களை புதிய உள்துறை அமைச்சர் பதவியேற்றவுடன் அவரது பரிசீலனைக்கு அனுப்பி வைப்பது குடியரசுத் தலைவரின் கடமையாகும். அதன் அடிப்படையில், கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி புதிய உள்துறை அமைச்சராகப் பதவியேற்ற சுஷில் குமார் ஷிண்டேவுக்கு குடியரசுத் தலைவர் அனுப்பி வைத்துள்ளார்.
இந்த ஏழு மனுக்களும் ஏற்கனவே குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டிருந்தன. அவற்றுடன் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் கருத்துக்களும், உள்துறை அமைச்சக பரிந்துரைகளும் இணைக்கப்பட்டிருந்தன.
அப்சல் குரு மனுவைப் பொறுத்தவரை அவர் சார்பி்ல அவரது மனைவி தாக்கல் செய்திருந்த கருணை மனுவை ஏற்காமல் நிராகரிக்க வேண்டும் என்று டெல்லி அரசும், உள்துறை அமைச்சகமும் ஏற்கனவே குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்துள்ளன என்பது நினைவிருக்கலாம்.
இந்த ஏழு மனுக்கள் தவிர மேலும் 5 கருணை மனுக்களும் உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளன.
மேலும், குடியரசுத் தலைவர் வசம் 2 கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.