4-வது நாளாக முடங்கியது பார்லி.! மக்களவை நாளை மறுநாள் வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவதற்காக நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. மத்திய அமைச்சர் கமல்நாத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கான அனுமதி குறித்து வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்துவதில் பாஜகவும் இடதுசாரிகளும் உறுதியாக இருந்தன. மத்திய அரசோ விவாதம் மட்டும் போதும் என்றது. இதனால் ஒருமித்த கருத்து எட்டப்படாமலேயே அக்கூட்டம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடிய உடனேயே அமளி ஏற்பட்டது. மக்களவையில் சபாநாயகர் மீரா குமார், பெண் எம்.பிக்களைப் பார்த்து பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான கேள்விகளை முன்வைக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் 'எப்டிஐ நஹி சலேகா" என்ற சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிரான முழக்கம் தொடர்ந்ததால் மக்களவை முதலில் பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவையும் பகல் 12 மனி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பகல் 12 மணிக்கு கூடியபோதும் அமளி நீடித்ததால் நாளைவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையோ பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு மக்களவை கூடியபோதும் அமளி நீடித்ததால் நாளை மறுநாள் வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications