2013 ஜூன் முதல் தமிழகத்தில் மின்தடையே இருக்காதாம் தெரியுமா: அமைச்சர் 'நத்தம்' சொல்லிட்டார்!

இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பு (ஃபிக்கி) சார்பில் சென்னையில் நிலைத்த நீடித்த எரிசக்தி மேலாண்மையின் புதிய யுகம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
அதில் கலந்து கொண்ட மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது,
தமிழகத்தின் மின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே உள்ள இடைவெளி 4,000 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இதற்கு மத்திய மின் தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மின்சாரத்தின் அளவு குறைக்கப்பட்டுள்ளதே காரணம். மத்திய அரசிடம் கூடுதல் மின்சாரம் கேட்டும் அது எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை.
வட மாநில மின் வழித் தடங்களுடன் தென் மாநிலங்களை முழுமையாக இணைக்காததால் தேவைக்கு அதிகமாக மின் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் இருந்து தமிழகத்தால் மின்சாரம் பெற முடியவில்லை. தற்போது வட மாநில மின் கட்டமைப்பில் இருந்து ஒரேயொரு வழித் தடம் தான் தென் மாநிலங்களை இணைக்கிறது. இந்த ஒரே வழித்தடத்தின் மூலம் தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் ஆந்திராவுக்கு மின்சாரம் கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து மேலும் ஒரு வழித் தடத்தை அமைக்க மத்திய அரசு கடந்த மாதம் அனுமதி அளித்து. இதையடுத்து துவங்கப்பட்ட திட்டப்பணிகள் வரும் 2014ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தான் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2013ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது. மேட்டூர், வல்லூர், வடசென்னை அனல் மின் நிலையங்களில் இருந்து வரும் ஜூன் மாதம் முதல் 1,880 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இது தவிர சில தனியார் உற்பத்தியாளர்கள் வரும் 2013ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மின் உற்பத்தியை துவக்குகின்றனர். அவர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் முழு மின்சாரத்தையும் அரசுக்கே அளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
மேலும் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு கிடைத்தால் தற்போதுள்ள 4,000 மெகாவாட் மின் பற்றாக்குறை வரும் ஜூன் மாதம் முதல் சீராகிவிடும். மேலும் 500 மெகாவாட் மின்சாரமும் கையிருப்பு இருக்கும்.
எனவே வரும் டிசம்பர் மாதம் முதல் மின்வெட்டு பிரச்சனை படிப்படியாக குறைவதோடு 2013ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தமிழகம் மின்வெட்டில்லா மாநிலமாக மாறும் என்றார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications