நாட்டிலேயே தமிழகக் காவல்துறைக்குத்தான் முதன்மை இடம்: ஜெயலலிதா பெருமிதம்

சென்னையில் கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு கடந்த 17-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று காவல்துறை அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்ட மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில்,
இந்தியாவிலேயே தமிழக காவல் துறைதான் பல்வேறு விஷயங்களில் முதன்மை இடத்தில் இருப்பதை நாம் பெருமையோடு சொல்லி கொள்ளலாம். 1992-ம் ஆண்டு நான் முதல்வர் பொறுப்பில் இருந்தபோதுதான் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தொடங்கும் திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. 1994-ம் ஆண்டு என்னால் கடலோர பாதுகாப்பு படை தொடங்கப்பட்டது. 11 ஆண்டுகள் கழித்து இந்திய அரசு இதே போன்று திட்டம் தொடங்கி நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
2002-ம் ஆண்டு "அவசர விபத்து மீட்பு மையங்கள்'', 2003-ல் நெடுஞ்சாலைகளில் போலீசார் ரோந்து பணி, 2003-ம் ஆண்டு தமிழக காவல் துறையில் பாய்ஸ் கிளப் ஆகியவற்றையும் நானே தொடங்கி வைத்தேன். இந்த ஆண்டு போலீஸ் கேண்டீன்கள்,. போலீசாருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மருத்துவ உதவியில் பல்வேறு திட்டங்கள், போலீசாருக்கு "உங்கள் சொந்த இல்லம்'' பெயரில் 36 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டம் ஆகியவற்றை கொண்டுவந்திருக்கிறேன்.
சட்டசபையில் "தமிழ்நாடு காவல் துறையில் இளைஞர் படை'' உருவாக்கப்படும் என்று நான் அறிவித்தேன். திறமையான கட்டுப்பாடான காவல்துறையை நான் உருவாக்கி உள்ளேன். எனவே குற்றங்களை தடுக்கவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், இங்கு வந்துள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications