தமிழகத்திற்கு தண்ணீர் விட கர்நாடகத்திற்கு உத்தரவிட முடியாது- காவிரி கண்காணிப்புக் குழு

டெல்லியில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் டி.வி.சிங் தலைமையில் காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், கர்நாடக தலைமைச் செயலர் ரங்கநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் இருமாநில தண்ணீர் தேவை குறித்தும், தமிழகத்திற்கு கர்நாடக அரசு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, ஜனவரி மாதம் மட்டும் 18 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுவதாகவும் மேலும் நிலுவையில் உள்ள 37 டிஎம்சி நீரையும் சேர்த்து 55 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா விடுவிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்திது.மேலும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுப்பு
இதற்கு கர்நாடக தலைமைச் செயலாளர் எதிர்ப்பு தெரிவித்தார். தண்ணீர் இருப்பு குறித்தும் அவர் விளக்கினார். தண்ணீர் திறக்க இயலாது என்றும் தெரிவித்தார். குடிநீருக்கு மட்டுமே தங்களிடம்தண்ணீர் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து கூட்டத்தின் இறுதியில்,குடிநீருக்கு மட்டுமே தங்களிடம் தண்ணீர் இருப்பதாக கர்நாடகம் கூறுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்குமாறு உத்தரவிட முடியாது என்று காவிரி கண்காணிப்புக் குழு கூறி விட்டது.












Click it and Unblock the Notifications