’ஆம்னிகளின்’ கட்டண வேட்டை.. பரிதவித்த பயணிகள்! பாய்ந்தது நடவடிக்கை!!

தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு ஆயிரக்கணக்கான சிறப்புப் பேருந்துகளை அரசு இயக்கி வருகிறது. இருப்பினும் மக்கள் கூட்டம் அலைமோதுவால் அப்படியே ஆம்னி பேருந்துகளை எட்டிப் பார்க்க வேண்டியிருக்கிறது. இதை சாதகமாக்கிக் கொள்ளும் 'ஆம்னி' புரோக்கர்கள் இஸ்டத்துக்கு டிக்கெட் விலையை உயர்த்திவிட்டு கமிஷன் பெற்றுக் கொள்கின்றனர்.
சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு போக ஏ.சி. படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்தில் ரூ1200ம் ஏ.சி. இல்லாத பேருந்தில் ரூ600ம் வசூலிக்கப்படும். ஆனால் நேற்று வசூலிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு தெரியுமா? ஏ.சி. பேருந்துக்கு ரூ1800! ஏ.சி. இல்லாத பேருந்துக்கு ரூ1200!! இதே நிலைமைதான் திருச்சி, மதுரை, திண்டுக்கல் செல்லும் கட்டணமும் மயக்கம் போட வைக்கிறது! சராசரியாக ரூ500 முதல் ரூ700 வரை வழக்கமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அரசு சிறப்பு கண்காணிப்புக் குழுக்களை அமைத்து இருந்தாலும் பொதுமக்கள் அட்ஜெஸ் செய்து பயணத்தைத் தொடர்கின்றனர். பொறுக்கமுடியாதவர்கள் பொங்கி எழுந்து 'பொங்கல்' வைப்பதோடு சரி என்று ஆதங்கப்படுவோருக்கு ஆறுதலாக இருக்கிறது அரசின் நடவடிக்கை!
பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 14 பேருந்துகளின் உரிமம் கேன்சல் செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களிடம் இருந்து ரூ10.50 லட்சம் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், நேற்று கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்திலிருந்து 592 பேருந்துகள் வெளியேறின. 14 ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்ததும், ஒரு சிலவற்றில் முறையான ஆவணங்கள் இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இவற்றின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் அபராதமாக ரூ. 10.50 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது சென்னையிலிருந்து தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக ஆன்-லைன் முன் பதிவு மூலம் வசூலாகியுள்ள டிக்கெட் கட்டணம் ரூ. 1 கோடியைத் தாண்டியுள்ளது என்றார் அவர்.
அரசு நடவடிக்கை ஒருபுறம் இருக்கட்டும்! நீங்கள் ஆம்னி பேருந்தில் பயணம் செய்ய முடிவு செய்தவர்களாக இருந்தால், 044-24794709, 044-28594540, 044-28583497 ஆகிய தொலைபேசி எண்களிலும் 9444403096, 9443104686 ஆகிய செல்போன் எண்களிலும் புகார் தெரிவிக்கலாம்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications