'சாதிவெறி' ஆசிஷ் நந்திக்கு எதிராக கலகக் குரல் எழுப்பாத 'சமூகநீதி' தமிழகம்!

தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் இயக்கங்களுமே இப்பொழுது 'விஸ்வரூபம்' காய்ச்சலில் வீழ்ந்து கிடக்கின்றன.
ஆனால் நாட்டின் பெரும்பான்மை மக்களின் கையில் அதிகாரம் சென்றடைந்ததால்தான் 'ஊழலே' உருவானது என்று பொறுப்பே இல்லாமல் ஒரு சாதி வெறியராக 'சமூக வியலாளர்' போர்வையில் உலா வரும் ஆசிஷ் நந்தி என்ற எழுத்தாளர் பேசியிருக்கிறார். அவருக்கு எதிராக 'சமூக நீதியின்' தாயகம் என்று பெருமைபீற்றும் தமிழகத்தில் ஒரு கலகக் குரலையும் காணவில்லை.
ஆங்கில ஏட்டின் செய்தியாளர் ஒருவர் கேட்டதற்காக சிலர் மட்டும் 'கருத்து தெரிவித்திருக்கின்றனர். திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி இது பற்றி கூறுகையில், "ஆசிஷ் நந்தியின் மனநிலை என்ன என்பது வெளிச்சமாகியிருக்கிறது. அவர் தமது கருத்து மூலம் அம்பலமாகியிருக்கிறார்" என்றார்.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கூறுகையில், போபர்ஸ், காமன்வெல்த் போன்ற ஊழல்களில் ஈடுபட்டது உயர் சாதியினர்தான். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவின் பிரதமராக பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரான தேவ கவுடா இருந்தார். அவர் ஒருவர்தான் ஊழலில் சிக்காத ஒரே பிரதமர். மற்ற உயர் சாதி பிரதமர்கள் அனைவருமே ஊழலுக்குள்ளாகியவர்கள்தான் என்று கூறியுள்ளார்.
இதுபோல் ஒரு சில கருத்துகள் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் கொந்தளிப்பான ஒருநிலை உருவாகாமல் இருப்பதால்தான் ஊர் ஊருக்கு சாதிய சங்கங்களின் கூட்டத்தை பாமக நிறுவனர் ராமதாசால் நடத்த முடிகிறதோ!
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications