வெள்ளிக்கிழமை பூமியை நெருங்கும் விண்கல்; செயற்கை கோள்களில் மோதலாம்!
2012 DA14 என்ற இந்த விண்கல் 45.7 விட்டம் கொண்டது. இது முதலில் பூமியின் மீது மோதலாம் என அஞ்சப்பட்டது. ஆனால், அதற்கான வாய்ப்பே இல்லை என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா தெரிவித்துள்ளது.
இந்த விண்கல் பூமியை வெறும் 27,681 கி.மீ தூரத்தில் கடந்து செல்லப் போகிறது. இது அண்டவெளியில் அளவுகளோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறுகிய தூரமாகும். இவ்வளவு நெருக்கத்தில் ஒரு விண்கல் பூமியை நெருங்கிச் செல்வதை இதுவரை விஞ்ஞானிகள் பார்த்தும் இல்லை.
இது பூமியில் வந்து விழப் போவதில்லை என்றாலும் பூமிக்கு மேலே சுமார் 35,406 கி.மீ உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பல்வேறு நாடுகளில் நூற்றுக்கணக்கான தொலைத் தொடர்பு, வானிலை, உளவு செயற்கைக் கோள்களில் ஏதாவது ஒன்றின் மீது மோதுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
வரும் வெள்ளிக்கிழமை பூமியை 27,681 கி.மீ தூரத்தில் கடந்து செல்லப் போகும் இந்த விண்கல்லை உலகின் பல்வேறு வானியல் தொலைநோக்கிகளும், வானில் சுற்றும் ஹப்பிள் தொலைநோக்கியும் கண்காணித்துக் கொண்டுள்ளன.
அதே போல இது பூமிக்கு அருகே வந்துவிட்டுப் போவதைக் காண ஆயிரக்கணக்கான விண்வெளி ஆர்வளர்களும் தங்களது புவியியல் தொலைநோக்கிகளுடன் வான்வெளியை நோக்க வருகின்றன.
இந்த விண்கல் மணிக்கு 30,000 கி.மீ. வேகத்தில், அதாவது ஒலிவை விட 8 மடங்கு வேகத்தில் பயணிக்கவுள்ளது. இது ஏதாவது ஒரு செயற்கைக் கோளின் மீது மோதினால் என்ன ஆகும் என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை.
தொடர்பான செய்தி:
பிப்ரவரி 15ம் தேதி பூமிக்கு மிக மிக அருகே வரப் போகும் விண்கல்!