ரயில் மோதி 5 பேர் பலி- செல்லில் பேசியபடி வண்டி ஓட்டியதால் வந்தது வினை
நெல்லை: நாங்குநேரி அருகே ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்கும்போது செல்போன் பேசிக் கொண்டே பைக் ஓட்டியதால் 5 உயிர்கள் பலியானதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
வள்ளியூரில் ஹோட்டல் நடத்தி வந்தவர் ராஜமாணிக்கம். இவரது உறவினர்கள் வெங்கடாசலம், கணபதி, களக்காடு தேவநல்லூரை சேர்ந்த இசக்கிமுத்து, ராமநாதபுரம் அருகேயுள்ள குட்டன்குளத்தை சேர்ந்த ஞானராஜேந்திரன் ஆகியோர் நேற்று முன்தினம் நாங்குநேரி அருகேயுள்ள ஸ்ரீரங்கராஜபுரத்தில் உறவினர் கனி என்பவர் இறந்த தூக்கம் விசாரிக்க இரு பைக்குகளில் சென்றனர்.
இறுதி சடங்கு முடிந்து மதியம் 5 பேரும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். நாங்குநேரி அருகே நெடுங்குளத்தில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது கொச்சியில் இருந்து பெட்ரோலிய பொருட்கள் ஏற்றி வந்த சரக்கு ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் 5 பேரும் உடல் நசுங்கி இறந்தனர்.
விபத்து நடந்த ஆளில்லா ரயில்வே கேட் அருகே கட்டிட வேலை நடந்து வருகிறது. அதில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், 2 பைக்குளில் வந்தவர்கள் ரயில்வே கேட்டை கடப்பதற்கு முன் செல்போனில் பேசிக் கொண்டே சென்றனர். இதனால் அங்கு வந்த சரக்கு ரயிலை அவர்கள் கவனிக்கவில்லை. இதனை பார்த்த நாங்கள் சைகை காட்டி கூச்சல் போட்டோம். அதனையும் அவர்கள் கவனிக்கவில்லை.
2 பைக்குகளிலும் வந்தவர்கள் ஓரே நேரத்தில் பேசிக் கொண்டே வந்ததால் கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்தில் சிக்கி கொண்டனர். நாங்கள் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தும் பலன் அளிக்காமல் போய் விடடது. எங்கள் கண்முன் ரயிலில் அடிபட்டு உடல் துண்டாகி பலியானதை கண்டு அதிர்ச்சியில் உறைந்து விட்டோம் என்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications