For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாகாலாந்து, மேகாலயா சட்டசபை தேர்தல்- 80%க்கும் அதிகமாக வாக்குகள் பதிவு!

By Mathi
Google Oneindia Tamil News

Voting
ஷில்லாங்/கோஹிமா: நாகாலாந்து மற்றும் மேகாலயா சட்டசபைகளுக்கான தேர்தலில் 80%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

நாகாலாந்தில் 59 தொகுதிகளுக்கும் மேகாலயாவில் 60 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது.அனைத்து பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 4 மணியுடன் நிறைவடைந்த வாக்குப் பதிவில் 83% வாக்குகள் பதிவாகின.

மேகாலயா மாநிலத்தில் 60 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இம்மாநிலத்தில் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரி ஆயுதக் குழுவினர் முழு அடைப்புக்கும் அழைப்பு விடுட்திருந்தனர். இருப்பினும் மாலை வரை மொத்தம் 88% வாக்குகள் பதிவாகி இருந்தன.

இதற்கு முன்பு திரிபுரா மாநிலத்தில் 93% வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Despite a boycott call by a militant outfit, Meghalaya saw a high turnout of over 88 per cent voters in the assembly polls on Saturday. In Nagaland, the other northeastern state to go to the polls along with Meghalaya, more than 83 per cent of the electorate cast their votes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X