விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் கெய்ல் நிறுவனத்தின் திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கொச்சினிலிருந்து பெங்களூரு வரை 871 கிலோ மீட்டர் தொலைவிற்கு எரிவாயு எடுத்து செல்வதற்கான குழாயை கெய்ல் நிறுவனம் அமைத்து வருகிறது.
தமிழகத்தில், ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்ட விளைநிலங்கள் வழியாக இந்த எரிவாயு குழாய்கள் பதிக்கப்படுவதால், விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கூறிவருகின்றனர். இதனை எதிர்த்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி ராஜேஷ் குமார் அகர்வால் மற்றும் நீதிபதி பால் வசந்த குமார் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். அப்போது, எரிவாயு குழாய் புதிக்கும் பணிகளுக்கு 3 வார காலம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்த பிரச்னையில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்ட ஆட்சியர்கள் 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications