மறு உத்தரவு வரும் வரை நாட்டை விட்டு வெளியேறக் கூடாது - இத்தாலி தூதருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அரபிக் கடலில், இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு கேரள மீனவரையும், ஒரு தமிழக மீனவரையும் இத்தாலி நாட்டுக் கப்பலில் பயணித்த அந்த நாட்டு கடற்படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த பரபரப்பு சம்பவம் தொடர்பாக இத்தாலி நாட்டுக் கடற்படையினர் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் சமீபத்தில் அவர்களது நாட்டுக்கு நிபந்தனையின் பேரில் அனுமதிக்கப்பட்டனர். அதாவது அந்த நாட்டில் நடந்த தேர்தலுக்குப் பிறகு மீண்டும் இந்தியா திரும்பி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்பது நிபந்தனை. இதை ஏற்றுக் கொண்டு சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவாதப் பத்திரத்திலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார் இத்தாலி தூதர் டேணியல் மன்சினி.
ஆனால் தற்போது இரு கடற்படை வீரர்களையும் திருப்பி அனுப்ப முடியாது என்று அந்த நாடு கூறி விட்டது. இதனால் இந்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இத்தாலியின் செயல் மிகப் பெரிய நம்பிக்கை துரோகம் என்று இந்தியக் கட்சிகள் அனைத்தும் சாடியுள்ளன.
மேலும் சுப்ரீம் கோர்ட்டும் இந்த விவகாரத்தில் கடும் கோபமடைந்துள்ளது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இத்தாலி தூதர் டேணியல் மன்சினி நேரில் ஆஜரானார். தான் கைது செய்யப்படாமல் தப்பிப்பதற்காக தனக்கு தூதரக சலுகை காட்ட வேண்டும் என்று அவர் கோரி மனு ஒன்றை சமர்ப்பித்தார்.
அதைப் பரிசீலித்த நீதிபதிகள் கோபம் கலந்த குரலில் கூறுகையில், இனி மேல் உங்களை நம்புவதாக இல்லை. இத்தாலி மீதான நம்பிக்கையை இழந்து விட்டோம். இத்தாலி தூதர் இவ்வாறு நடந்து கொள்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அடுத்த விசாரணை ஏப்ரல் 2ம் தேதி நடைபெறும். அதுவரை இந்தியாவை விட்டு இத்தாலி தூதர் வெளியறேக் கூடாது.
மார்ச் 22ம் தேதி வரை இத்தாலிக்கு அவகாசம் தருகிறோம். அதற்குள் இத்தாலிய கடற்படையினரான மஸ்ஸிமிலனோ லட்டோர், சால்வடோர் கிரோன் ஆகிய இருவரையும் நேரில் ஆஜர்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இத்தாலி தூதர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும் என்று உத்தரவிட்டனர் நீதிபதிகள்.
ஏற்கனவே இத்தாலி தூதர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று மார்ச் 14ம் தேதி உத்தரவிட்டிருந்தது சுப்ரீம் கோர்ட் என்பது நினைவிருக்கலாம். தற்போது இது ஏப்ரல் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 22ம் தேதிக்குள் இரு இத்தாலிய கடற்படையினரும் இந்தியாவுக்கு கொண்டு வரப்படாவிட்டால், இத்தாலி தூதர் அன்றைய தினம் கைது செய்யப்படக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications