இருபிரிவினர் மோதல்: ராமேஸ்வரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, 60 பேர் கைது! பதற்றம்
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடைபெற்றது. இதில் 60 பேர் கைது செய்யப்பட்டனர் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நீடிக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 22.03.2013 வெள்ளிக்கிழமை மாலை ரமேஸ்வரம் கோவிலுக்கு பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக இரண்டு ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது கைகலப்பில் முடிந்து மோதலாக வெடித்தது.
ஆட்டோ டிரைவர் செந்தில் மற்றும் விக்கி ஆகியோர் இடையே ஏற்பட்ட மோதல் இரு பிரிவினரிடையேயான மோதலாக மாறியது. இதில், பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. அருகில் இருந்த கடைகளுக்கு தீவைக்கப்பட்டன. இதனால் எழுந்த பதற்றமான சூழ்நிலையால் அங்கே போலீஸார் குவிக்கப்பட்டனர். வன்முறை சம்பவம் நடந்த இடங்களை போலீஸ் டிஐஜி ராமசுப்பிரமணியன் பார்வையிட்டார்.
இதனைக் கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை இடப்பட்டது. இந்நிலையில், இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications