For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்களுக்கு கேம்பிரிட்ஜ்தான் பெஸ்ட்.. ராஜீவ், சோனியாவை நாண வைத்த தாட்சர்!

Google Oneindia Tamil News

லண்டன்: ராஜீவ் காந்தியும், சோனியா காந்தியும் லண்டனுக்கு வந்திருந்தபோது அவர்களை வரவேற்ற மார்கரெட் தாட்சர், இருவரும் கேம்பிரிட்ஜில் படித்தபோது காதலித்ததை மறைமுகமாக சுட்டிக் காட்டி பேசியபோது, ராஜீவும், சோனியாவும் சந்தோஷத்தில் நாணப்பட்டனராம்.

இங்கிலாந்தின் இரும்புப் பெண்மணியான மார்கரெட் தாட்சர் குறித்து நினைவு கூற எத்தனையோ சம்பவங்கள்.. 20ம் நூற்றாண்டின் மாபெரும் அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் தாட்சர்.

அவருக்கும், இந்தியாவுக்கும் கூட நிறைய தொடர்புகள் உள்ளன. நேரு குடும்பத்துடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர் தாட்சர்.

தாட்சர், ராஜீவ், சோனியா தொடர்பான சில சுவாரஸ்ய நிமிஷங்கள் குறித்த தொகுப்பு இதோ...

இரும்புக்குள் நகைச்சுவைக் கரும்பு...

இரும்புக்குள் நகைச்சுவைக் கரும்பு...

தாட்சர் இரும்புப் பெண்மணியாக இருந்தாலும் நகைச்சுவை உணர்வு மிக்கவர். அதிலும் டைமிங்காக காமெடியாக பேசுவதில் அவர் கில்லாடி.

லண்டனுக்கு வந்த ராஜீவ், சோனியா

லண்டனுக்கு வந்த ராஜீவ், சோனியா

1985ம் ஆண்டுஅக்டோபர் மாதம் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், மனைவி சோனியாவும் லண்டன் வந்திருந்தனர். பிரதமர் தாட்சரை அவரது இல்லத்தில்சந்தித்துப் பேசினர்.

டின்னரில் கலாய்த்த தாட்சர்

டின்னரில் கலாய்த்த தாட்சர்

ராஜீவ் தம்பதிக்கு டின்னர் கொடுத்து உபசரித்தார் தாட்சர். அப்போது வழக்கமான நகைச்சுவை இழையோட அவர் ராஜீவ் தம்பதியரிடம் வேடிக்கை செய்தார்.

கேம்பிரிட்ஜை விடவா...

கேம்பிரிட்ஜை விடவா...

டின்னரில் அமர்ந்திருந்த ராஜீவிடம் தாட்சர் கூறுகையில், நீங்களும் உங்களது மனைவியும் இந்த ஊருக்குப் புதியவர்கள் இல்லை. நன்கு அறிமுகமானவர்கள்தான். இங்கேதான் நீங்கள் முதன் முதலில் சந்தித்தனர். பழகினர். நட்பு கொண்டீர்கள், காதல் கொண்டீர்கள். உங்களுக்கு கேம்பிரிட்ஜ்தான் பொருத்தமான இடம். அதை விட பொருத்தமான இடம் வேறு உண்டா... என்றார் சிரித்தபடி.

வெட்கப்பட்ட ராஜீவ், சோனியா

வெட்கப்பட்ட ராஜீவ், சோனியா

தங்களது காதல் பிளாஷ்பேக்கை தாட்சர் சொன்னதும், ராஜீவுக்கும், சோனியாவுக்கும் வெட்கம் வந்து விட்டதாம். புன்னகைத்தபடி இருவரும் அமர்ந்திருந்தனராம்.

காதலிலிருந்து தீவிரவாதம் நோக்கி...

காதலிலிருந்து தீவிரவாதம் நோக்கி...

ராஜீவின் காதல் குறித்துப் பேசிய தாட்சர் அடுத்து சீரியஸ் விஷயத்துக்குத் தாவினார். குறிப்பாக தீவிரவாதம் குறித்து அவர் ராஜீவ் காந்தியிடம் சீரியஸாக விவாதித்தாராம்.

இந்திரா குறித்தும்

இந்திரா குறித்தும்

பிந்னர் இந்திரா காந்தி குறித்தும் ராஜீவிடம் பேசினார். இந்திராவின் மரணத்தைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி செயல்பட்ட விதம், அதை ஏற்றுக் கொண்டு மனதை திடப்படுத்திக் கொண்ட பக்குவம் குறித்தும் பாராட்டினாராம் தாட்சர்.

English summary
It wasn't just her steely grit that the world knew Britain's Iron Lady Margaret Thatcher for. It was also for her straight faced humour. A speech by Baroness Thatcher during Rajiv Gandhi's visit in the October of 1985 iconized such humour. Her speech at a dinner hosted for then Prime Minister Rajiv Gandhi at 10 Downing Street in October 1985 personified it. "I know that neither you nor your wife are strangers here; indeed it was Britain's privilege to provide the place where you met. Indeed now I come to think of it, it's about the best thing that Cambridge has done being in all other respects unable to match up to," she told Rajiv. Thatcher then moved seamlessly to more serious issue of terrorism while talking about the Suppression of Terrorism Act as an "important step forward in dealing with the problem".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X