ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை போராடுவோம்... வைகோ
நெல்லை: "ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை எனது போராட்டம் தொடரும்" என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் உள்ள மேலநீலிதநல்லூரில் செவ்வாய்கிழமை இரவு முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சிங்கபுலி பாண்டியன் ஓராண்டு நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய வைகோ கூறியதாவது:
ஸ்டெர்லைட் ஆலை அதிபர் அனில் அகர்வால் பல தலைவர்களை அசைத்து பார்த்துவிட்டாலும், அசைக்கமுடியாத ஆள் நான் ஒருவன்தான். வைகோவிடம் நெருப்பு கூட அண்டமுடியாது. ஆலையை மூடும்வரை என் போராட்டம் தொடரும்.

இதில் என்னையும் மனுதாரராக ஏற்றுக்கொள்ளும்படி நீதிபதி சொக்கலிங்கத்திடம் வேண்டுகோள் வைத்தேன். நீண்ட காலமாக போராடிவருவதை கருத்தில் கொண்டு உங்கள் மனுவை ஏற்றுக்கொள்வதாகவும், உங்கள் மனுவை விரைந்து அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் அதற்கான பணிகளை முடித்துவிட்டு கூட்டத்திற்கு வந்திருக்கிறேன்.
முதல்வருக்கு நன்றி
மார்ச் 23ஆம் தேதி சட்டமன்றத்தில் ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு கோரி தீர்மானம் இயற்ற வேண்டும் என அறிக்கை வெளியிட்டுருந்தேன். 29ஆம் தேதி தமிழக முதல்வர் தீர்மானம் நிறைவேற்றிருக்கிறார். அதற்காக முதல்வருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தேன். நல்லது செய்தால் பாராட்டுவோம்.
திருமங்கலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரித்தேன், நாளையும் ஆதரிப்பேன் என்று சொன்னேன். அப்போதெல்லாம் கடைகளில் புளி என்று சொல்லக்கூட பலரும் பயந்தார்கள். இன்று அனைத்து தலைவர்களும் ஆதரிப்பதுகண்டு மகிழ்ச்சி அடைகிறேன். மாணவர்கள் களத்தில் போராடுகிறார்கள் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு வைகோ பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ப.அ.சரவணன், எஸ்.பெருமாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி, மாணவர் அணி செயலாளர் தி.மு.ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications