3 பேரின் தூக்கு தண்டனையை மாற்ற அரசு தீர்மானம் நிறைவேற்றுக: கருணாநிதி

இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
புல்லர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. தூக்குத் தண்டனையை அறவே ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே தி.மு.க நிலைப்பாடு.
எனவே முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கை மாற்ற தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அந்த தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி 3 பேரையும் விடுவிக்க ஆவண செய்ய வேண்டும் .
மேலும் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை தொடர்ந்து சிறையில் வைக்காமல் விடுவிக்க வேண்டும் என்றும் கருணாநிதி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் தேசிய பொது உடமைக் கட்சி
இதேபோல் மூவரின் மரணத் தண்டனையை தமிழக அரசே ரத்து செய்ய வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
புல்லர் வழக்கும், பேரறிவாளன், முருகன், சாந்தன் வழக்கும், பெரிதும் ஒத்தத்தன்மையானவை என இதே நீதிமன்றம் வரையறுத்துவிட்டால், புல்லர் வழக்கில் தீர்ப்புரைத்தது போலவே உச்ச நீதிமன்றம் மூவர் வழக்கிலும் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்புரைக்கும் ஆபத்து உண்டு.
எனவே அரசமைப்பு சட்டவிதி 161-ன்படி தமிழக அமைச்சரவை முடிவு செய்து, மாநில ஆளுநர் மூலமாக பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ் தேசிய பொது உடமைக் கட்சியின் செயலாளர் கி.வெங்கட்ராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications