எஸ்.எஸ்.எல்.சி. கணித வினாக்கள் கடினம்: மாணவர்களுக்கு 10 மார்க் போனஸ்
சென்னை: 10ம் வகுப்பு கணித தேர்வில் கடினமாக வினாக்கள் கேட்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க அரசு தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 5ம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்கள் கணித தேர்வு எழுதினர். தேர்வில் ப்ளூ பிரிண்ட்டுக்கு மாறாக வினாத்தாள் இருந்ததால் அதைப் பார்த்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 5 மதிப்பெண்களுக்கான மேட்ரிக்ஸில் வழக்கமாக ஒரு வினா கோட்கப்படும். ஆனால் இம்முறை 2 வினாக்கள் கேட்கப்பட்டன. மேலும் அல்ஜீப்ராவில் வழக்கமாக கேட்கப்படும் 3 வினாக்களுக்கு பதில் 2 வினாக்கள் மட்டுமே கேட்கப்பட்டன. இது தவிர 5 மதிப்பெண்கள் பிரிவில் 2 வினாக்கள் கடினமாக இருந்ததால் அவற்றுக்கு விடை எழுத கூடுதல் நேரம் தேவைப்பட்டது. இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி திங்கட்கிழமை துவங்கியது. இந்நிலையில் கணக்கு தேர்வில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் போனஸாக வழங்க அரசு தேர்வுகள் இயக்ககம் தீர்மானித்துள்ளது.
இது குறித்து விடைத்தாள் திருத்தும் ஆசிரயர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விடைக் குறிப்பாணையில் கூறியிருப்பதாவது,
மேட்ரிக்ஸ், முக்கோணவியல் பாடப் பிரிவுகளில் ப்ளூ பிரிண்டுக்கு மாறாக கூடுதல் வினாக்கள் கேட்கப்பட்டிருப்பதால் கீழ்க்கண்ட நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். பிரிவு 3-ல் உள்ள அனைத்து விடைகளையும் மதிப்பீடு செய்து அதில் மிகக் குறைவான மதிப்பெண் பெற்ற இரண்டு விடைகளைத் தேர்வு செய்து அவற்றுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும்.
அதாவது ஒரு மாணவன் 0, 1, 2, 3, 4 என மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவருக்கு 5 மதிப்பெண் வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் கூடுதலாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
அனைத்து விடைகளையும் மதிப்பீடு செய்து என்று அந்த குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அந்த பிரிவில் உள்ள 9 விடைகளுக்கும் விடையளித்த மாணவர்களுக்கு மட்டும் போனஸ் மதிப்பெண்கள் அளிப்பதா அல்லது ஓரிரு வினாக்களுக்கு விடையளித்தவர்களுக்கும் அளிக்கலாமா என்பது புரியாமல் ஆசிரியர்கள் குழம்பி வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications