பழைய துப்பாக்கித் தோட்டக்கள்... தூத்துக்குடி அருகே குளத்தில் கண்டெடுப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே வேப்பலோடை பகுதியில் சுமார் 15 கிலோ அளவில் பழைய துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசாரின் தீவிர கண்காணிப்பில் தூத்துக்குடி பள்ளி அருகே அனாதையாக நின்ற மர்மவேனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தூத்துக்குடி அருகே தருவைகுளம், வேப்பலோடை பகுதிகளிலுள்ள கண்மாயில் இருந்து பழைய துப்பாக்கி தோட்டாக்கள் கிலோ கணக்கில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆடுமேய்ப்பவர்கள் ஓடை பகுதியில் கிடந்த பழைய தோட்டாக்கள் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் சம்பவஇடத்திற்கு வந்த எஸ்.பி.,ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் அப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது அப்பகுதியில் உருக்குலைந்த துருப்பிடித்த நிலையில் கிடந்த பயனற்ற பழைய தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் மூட்டையாக கட்டி அள்ளிச்சென்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பயனற்று கிடந்த தோட்டாக்கள் அரபு நாட்டில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதியான பழைய இரும்பு கழிவுகளுடன் கலந்து வந்துள்ளது என்பதும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த இப்பொருளை திருப்பி அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது என்பதும் தெரிய வந்துள்ளது.
பொதுநலன்கருதி சமூகஆர்வலர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து துப்பாக்கி தோட்டாக்களை அரபு நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவை பெற்றனர். இருந்தபோதும் சில பழைய இரும்பு வியாபாரிகள் அனுப்புவதற்கு முன்வராமல் அவற்றை தூத்துக்குடியை சுற்றியுள்ள காட்டுப்பகுதி ஓடைகளில் வீசியுள்ளனர்.
கோடைகாலத்தில் ஓடைகள் தண்ணீரின்றி வறண்டு போனதால் துப்பாக்கி தோட்டாக்கள் வீசப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஈராக் போரின்போது பயன்படுத்தப்பட்ட பழைய துப்பாக்கி தோட்டாக்கள் கிலோ கணக்கில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications