பச்சைப் பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்
மதுரை: பச்சைப்ப பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகரை கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம்.
மதுரையில் சித்திரைத் திருவிழா கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. மீனாட்சித் திருக்கல்யாணம், தேரோட்டம், அதைத் தொடர்ந்து வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் பிரசித்தி பெற்றதாகும்.
வைகை ஆற்றில் இறங்குவதற்காக செவ்வாய்க்கிழமை மாலை அழகர் மலையில் இருந்து தங்கப்பல்லக்கில் கிளம்பினார் அழகர். நேற்று காலை மதுரை வந்த அழகருக்கு மூன்று மாவடி அருகே எதிர்சேவை நடைபெற்றது.
ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் இளைப்பாறிய அழகருக்கு விடிய விடிய பக்தர்கள் சர்க்கரைக் கிண்ணத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரவேற்பு கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து தல்லாக்குளம் பெருமாள் கோவிலில் தங்கிய அழகருக்கு விடிய விடிய திருமஞ்சனம் நடைபெற்றது. அங்கிருந்து இன்று காலையில் பச்சைப் பட்டுடுத்தி ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, கிளி, ஆகியவற்றை அணிந்து கொண்டு தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார் கள்ளழகர். வழிநெடுகிலும் காத்திருந்த பக்தர்கள் கோவிந்த முழக்கமிட்டு வரவேற்றனர். மதுரை வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைத்து கள்ளழகரை வரவேற்றார்.
வைகை ஆற்றில் அழகர் இறங்குவதைக் காண காத்திருந்த பக்தர்கள் ஆடி அசைந்து வந்த அழகருக்கு விசிறி விட்டும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் வெப்பம் தணித்தனர். இதனைத் தொடர்ந்து காலை 7.45 மணிக்கு ஆற்றில் இறங்கினார் அழகர். பச்சைப் பட்டுடுத்தி அழகர் இறங்கினால் மழை வளம் பெருகி, தானியங்கள் நன்றாக விளையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
<center><center><center><center><center><img style="-webkit-user-select:none;border:0px;" border="0" width="1" height="1" src="http://web.ventunotech.com/beacon/vtpixpc.gif?pid=2&pixelfrom=jp" /> <div id="vnVideoPlayerContent"></div> <script> var ven_video_key="MTMwODg5fHwyfHwxfHwxLDEsMQ=="; var ven_width="650"; var ven_height="417"; </script> <script type="text/javascript" src="http://ventunotech.com/plugins/cntplayer/ventuno_player.js"></script></center></center></center></center></center>
கள்ளழகரைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்திருந்தனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதேபோல் வைகை ஆறு ஓடும் மானாமதுரை, வாடிப்பட்டி ஆகிய ஊர்களிலும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்













Click it and Unblock the Notifications