பாக். சிறையில் சரப்ஜித்சிங் மீது திடீர் தாக்குதல்- சதி என உறவினர்கள் புகார்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 1990-ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர். அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரப்ஜித் சிங்குக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தான் குற்றமற்றவர் எனக் கூறி அவர் தாக்கல் செய்த ஐந்து கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.பல காரணங்களால் அவருடைய தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. கடந்த 22 ஆண்டுகளாக சரப்ஜித் சிங் பாகிஸ்தான் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
பாகிஸ்தானின் கோட் லக்பத் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சரப்ஜித் சிங்கை சிறை அதிகாரிகள் வேறு ஒரு அறைக்கு மாற்றும்போது சக கைதிகள் சிலர் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். கற்கள் மற்றும் தட்டுகளால் சரப்ஜித்சிங்கை அவர்கள் தாக்கியிருக்கின்றனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த சப்ரஜித் சிங் சிறைச்சாலை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். அவருடைய நிலைமை மிக மோசமாக இருந்ததையடுத்து சிறை மருத்துவர்களின் அறிவுரைப்படி ஜின்னா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர்.
4000 கைதிகளை மட்டுமே அடைத்து வைக்கக்கூடிய கோட் லக்பத் சிறைச்சாலையில் 17 ஆயிரம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் கைதிகளுக்குள் அடிக்கடி மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர். நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு, கடந்த பிப்ரவரி மாதம் தில்லி திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டதையடுத்து சரப்ஜித் சிங்குக்கு சக கைதிகளால் அடிக்கடி மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அமிர்தசரஸில் செய்தியாளர்களிடம் பேசிய சரப்ஜித்சிங்கின் சகோதரி, மத்திய அரசு எங்களது கோரிக்கையை ஏற்றிருந்தால் இந்த தாக்குதல் நடந்திருக்காது. நான் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேயை சந்தித்த போது சரப்ஜித் சிங்குக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது பற்றி விவரித்திருந்தோம்.. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாததால் அவர் தாக்கப்பட்டிருக்கிறார் என்று குமுறியுள்ளார்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications