கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் சிறுமி பலி... தமிழக அரசு மீது ராமதாஸ் குற்றச்சாட்டு!

இது குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகில் உள்ள சூரிபாளி என்ற கிராமத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 7 வயது சிறுமி, 15 மணி நேர முயற்சிக்கு பின்பு மீட்கப்பட்டார்.
ஆனால், போதிய சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறாள். இந்த செய்தி கேட்டதும் பேரதிர்ச்சி அடைந்தேன்.
தமிழகத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து குழந்தைகள் உயிரிழப்பது ஆண்டுதோறும் தொடர்கதையாக நடந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு முறை குழந்தைகள் இறக்கும் போதும் அதிரடியாக சில நடவடிக்கை எடுப்பதும், அதன் பின்பு, கண்டும் காணாமல் இருந்து விடுவதும் அரசின் வழக்கமாகி விட்டது.
ஆழ்துளை கிணறுகளை அமைக்கும் போது கடை பிடிப்பதற்கான விதிமுறைகளை வகுத்து, அவை உறுதியாக கடைபிடிக்கப்படும் சூழலை உருவாக்க தமிழக அரசு தவறிவிட்டது தான் இத்தகைய உயிரிழப்புகளுக்கு காரணம் ஆகும்.
ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுமியை மீட்கும் விஷயத்தில் அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டிருக்கிறார்கள்.
தரையிலிருந்து 12 அடி ஆழத்தில் சிறுமி சிக்கிக் கொண்டிருந்த நிலையில், முறையாக திட்டம் வகுத்து செயல்பட்டிருந்தால் எளிதாக மீட்டிருக்க முடியும். திருச்சி அல்லது பெங்களூரிலிருந்தோ ராணுவத்தினரை ஹெலிகாப்டர் மூலம் வரவழைத்திருந்தால் சில மணி நேரங்களில் சிறுமியை மீட்டிருக்க முடியும்.
மராட்டிய மாநிலம் சீரடியில் கடந்த ஆண்டு 50 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்ட 5 வயது சிறுவனை காவல்துறையினரும்,பொது மக்களும் முறையாக திட்டமிட்டு மீட்டனர்.
ஆனால், கரூரில் முறையான திட்டமிடல் இல்லாததாலும், தவறான அறிவுரைகளின் அடிப்படையில், நிரூபிக்கப்படாதமீட்பு முறைகளை பயன்படுத்தியதே சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமாகும்.
சிறுமியை இழந்து வாடும் அவளது பெற்றோருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications