ஒடிசா: கிராமத்தில் புகுந்து 8 பேரை கடித்து கொன்ற கரடி
புவனேஸ்வர்: ஒடிசாவில் கிராமத்தில் புகுந்து கரடி ஒன்று 8 பேரை கடித்து கொன்றதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
ஒடிசா மாநிலம் கோரா புட் பகுதியில் உள்ள தவரங்காபூர் கிராமம் வனப்பகுதியையொட்டியது. இந்த கிராமத்தில் திடீரென காட்டு கரடி ஒன்று புகுந்தது. கிராம மக்களின் தோட்டத்துக்குள் புகுந்த அந்த கரடி பயிர்களை சேதப்படுத்தியது. பின் தடுக்க முற்பட்ட கிராம மக்களையும் தாக்கி கொன்றது.
இதில், 8 பேர் பலியானார்கள். இவர்களில் 2 பேர் பெண்கள். மேலும் 10 பேரை கடித்து காயப்படுத்தியது. ஆட்களை அடித்துக் கொன்ற கரடி பிணத்தை இழுத்துச் சென்று அதே இடத்தில் பொதுமக்கள் முன்னிலையிலேயே கடித்து குதறி தின்றதால், பொதுமக்கள் ஆவேசமடைந்தனர்.
மக்கள் கும்பலாக திரண்டு கொலை வெறி பிடித்த கரடியை வேட்டையாடி கொன்றனர். கரடி அட்டக்காசத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் மாவட்ட கலெக்டர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு பலியானவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்கள்.
பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஒடிசா அரசு அறிவித்து உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications