கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட சுப்ரீம் கோர்ட் அனுமதி! போராட்ட வழக்குகளை வாபஸ் பெறவும் அட்வைஸ்!

கூடங்குளம் அணுமின்நிலையப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கூடங்குளம் அணுமின் நிலைய அணுக்கழிவு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மனுதாரர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்து வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும் பாதுகாப்பு விதிகளை முறையாக செயல்படுத்தும்வரை அணு உலையை இயக்கத் தடை விதிக்கவும் வலியுறுத்தப்பட்டது.
தீர்ப்பும் அட்வைஸும்
இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்தது. நீதிபதிஉகள் தங்களது தீர்ப்பில் நாட்டின் அணு சக்தி கொள்கைக்கு உச்சநீதிமன்றம் மதிப்பளிக்கிறது. பயன்படுத்தப்பட்ட எரிபொருளை சேமிக்கும் முறையை மத்திய அரசு கையாள வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக இருப்பதாகவே அனைத்து குழுக்களின் அறிக்கைகளும் தெரிவித்திருக்கின்றன. இதனால் கூடங்குளம் அணு உலை செயல்பட தடை விதிக்க முடியாது. கூடங்குளம் அணு உலை செயல்படலாம் என்று கூறியுள்ளனர்.
மேலும் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கை திரும்பப் பெறுவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஏமாற்றம்
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிர்வாகி வழக்கறிஞர் சுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இத் தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், ஒரு இனத்தின் எதிர்காலத்தை எங்கோ இருந்து வருகிற ஒரு நிறுவனம் தீர்மானித்து விட முடியாது. கூடங்குளம் அணு உலையில் மாதந்தோறும் ஒருவர் உயிரிழக்கின்றனர். கடந்த 5 மாதங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தீர்ப்பு ஏமாற்றத்தைத் தருகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும். ன்றார் .
கூடங்குளத்தில் கடைகள் அடைப்பு
கூடங்குளம் அணு உலை தொடர்பான தீர்ப்பு வெளியான நிலையில் அப்பகுதியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இத்தீர்ப்பைத் தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications