இந்தியாவுக்குப் போனால் ஜாக்கிரதை.. குடிமக்களை எச்சரிக்கிறது பாகிஸ்தான்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: இந்தியாவில் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் இந்தியப் பயணத்தின்போது மிகவும் கவனமாக இருக்குமாறு தனது நாட்டு மக்களை பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் மக்கள் இந்தியாவுக்குப் போக திட்டமிட்டால் அங்கு கூடுதல் கவனத்துடன் இருக்கும்படி பாகிஸ்தானியர்களை பாகிஸ்தான் அரசு அறிவுறுத்துகிறது. அங்கு பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை நிலவுகிறது. எனவே இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்வோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

அஜ்மீர் தர்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளவுள்ள 600 யாத்ரீகர்கள் மி்குந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அவர்களின் பாதுகாப்புக்கு குந்தகம் நேரிடும் வாய்ப்பு இருப்பதாக இந்திய பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளதால் கூடுதல் கவனத்துடன் அவர்கள் இருக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+