சிவகாசி வெடி விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு… நால்வர் கைது
சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கிச்சநாயக்கன்பட்டி பகுதியில், கருப்பையா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இங்கு நேற்று காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டபோது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விளாம்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (வயது65), சின்னபொட்டல்பட்டி செல்ல கருப்பாயி (30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மேலும் காயம் அடைந்த ஏ.துலுக்கப்பட்டி பரமசிவன் (57), விளாம்பட்டி சங்கர் மகன் மாரீஸ்வரன் (14) உள்பட 18-க்கும் மேற்பட்டோர், சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரமசிவம் நேற்று மதியம் இறந்தார்.
இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு மாரீஸ்வரன் பரிதாபமாக இறந்தான். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
விபத்தில் காயம் அடைந்த ஒன்றரை வயது குழந்தை மனோஜ்குமார் உள்பட மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து மாரநேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஆலை உரிமையாளர்கள் கருப்பையா, முருகன் மேலாளர் பொன்ராஜ், போர்மேன் முனியாண்டி ஆகியோரை கைது செய்தனர்.
ஆலையை மூட உத்தரவு
இதற்கிடையில், கடந்த ஏப்ரல் 29-ந்தேதி முதல் விருதுநகர் மாவட்ட பட்டாசு தொழிற்சாலைகளில் சிறப்பு குழுக்கள் ஆய்வு செய்ததில் 8பட்டாசு தொழிற்சாலைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆலைகளை மூட உத்தர விடப்பட்டுள்ளதாக, கலெக்டர் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications