49 மீனவர்கள் விடுதலை கோரி 22-ந் தேதி இலங்கையில் தஞ்சமடையும் போராட்டம்!
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 49 மீனவர்களை வரும் 20-ந் தேதிக்குள் விடுதலை செய்யாவிட்டால் 22-ந் தேதி வெள்ளைக்கொடி ஏந்தி இலங்கையில் தஞ்சமடையும் போராட்டத்தை நடத்தப் போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 49 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். அவர்கள் அனைவரும் வரும் 20-ந் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் அனைத்து மீனவர் சங்க பிரதிநிதிகள் அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மீனவர் சங்கத் தலைவர் என்.ஜே.போஸ் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் 49 மீனவர்களையும் வரும் 20-ந் தேதிக்குள் விடுதலை செய்ய வேண்டும். அப்படி விடுதலை செய்யாவிட்டால் ராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து விசைப் படகுகளும் 22-ந் தேதி வெள்ளைக்கொடி ஏந்தி இலங்கை நோக்கிப் பயணித்து அங்கு தஞ்சம் அடையும் போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் இலங்கை கடற்படையினர் தாக்குதல் தொடரும் நிலையில் இனிமேல் அதிகாலை 6 மணிக்கு பதிலாக பிற்பகல் 2 மணிக்கு மேல் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது என்றும் இதில் முடிவு எடுக்கப்பட்டது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications