இளவரசன் ரயிலில் அடிபட்டதை 2 பேர் நேரில் பார்த்தார்களா?
தர்மபுரி: தர்மபுரி இளவரசன் ரயிலில் அடிபட்டதை 2 பேர் நேரில் பார்த்ததாக ஒரு புதுத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து போலீஸார் தற்போது விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.அந்த இரண்டு பேரும் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இளவரசன் ரயிலில் அடிபட்டதை தாங்கள் நேரில் பார்த்ததாக அந்த இரண்டு பேரும் டேங்க் ஆபரேட்டரிடம் கூறினராம். இதையடுத்து அவர் தலையாரியிடம் கூறியுள்ளார். அதன் பின்னர் கிராம நிர்வாக அதிகாரி ஜெயராமனுக்குத் தகவல் போனதாம்.
ஜெயராமன், தனக்குக் கிடைத்த தகவலை அதியமான்கோட்டை காவல் நிலையத்துக்குத் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினராம்.
அப்போது இறந்தது யார் என்பது முதலில் போலீஸாருக்குத் தெரியவில்லை. அவரு பையைப் பார்த்தபோது அதில் இருந்த கடிதங்களில் திவ்யாவின் பெயர் இருந்ததால், இறந்தது இளவரசன் என்று சந்தேகமடைந்தனர் போலீஸார்.
இதையடுத்து இளவரசன் ஊரைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரரை அழைத்து வந்து அடையாளம் காட்டச் சொன்னபோதுதான் இறந்து கிடந்தது இளவரசன் என்று தெரிய வந்ததாம். பின்னர் இளவரசனின் தந்தையை அந்த போலீஸ்காரர்தான் தகவல் கொடுத்து வரவழைத்து உறுதிப்படுத்தினாராம்.












Click it and Unblock the Notifications