ராமதாஸ் மீது பாயும் நூற்றுக்கணக்கான வழக்குகள்: முதற்கட்டமாக 34 சம்மன்களை அனுப்பிய அரசு

கடந்த ஏப்ரல் 25-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை பெருவிழா மாநாட்டில் பங்கேற்பதற்காக கிழக்கு கடற்கரை சாலை வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்களில் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சென்றனர். அப்போது மரக்காணம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்கும், இவர்களுக்கும் ஏற்பட்ட தகராறு கலவரமாக வெடித்தது.
இச்சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றார். அப்போது காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பொதுச் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. சில இடங்களில் பஸ் எரிப்பு சம்பவங்களும் நடைபெற்றன. இதற்கு நூறு கோடி ருபாய்க்கு மேல் நஷ்ட ஈடு கோரி அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பாக 34 வழக்குகளில் ஆஜராகுமாறு பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு அவர் தங்கியுள்ள தைலாபுரம் தோட்டத்தில் சம்மன் வழங்கப்பட்டது.
வானூர் வட்டாட்சியர் கோபால்சாமி இச் சம்மனை வழங்கினார். பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் இல்லாததால் அவரது அலுவலக உதவியாளர் அனந்தகிருஷ்ணன் இச் சம்மனை பெற்றுக்கொண்டார்.
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக வரும் 23-ம் தேதி மாலை 4 மணிக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக வரும் 24-ம் தேதி மாலை 3.30 மணிக்கும், எழிலகம், சேப்பாக்கத்தில் உள்ள முதன்மை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் மேலும் தொடர்ந்து அவருக்கு சம்மன்கள் வழங்கப்படலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வெடுத்துவரும் டாக்டர் ராமதாஸ் இந்த வழக்குகளில் நேரில் ஆஜராவாரா என்பது 23ம் தேதி தெரியவரும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications