விதிகளை மீறிய 22 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ரூ49.5 கோடி அபராதம்
Subscribe to Oneindia Tamil
மும்பை: வாடிக்கையாளர்களின் விவரங்களை பராமரிக்காதது மற்றும் கருப்பு பணத்தை மாற்ற உதவுவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக 22 வங்கிகளுக்கு ரூ49.5 கோடி ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளின் நடைமுறையில் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அவற்றை பின்பற்றாமல் இருந்த 22 வங்கிகள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, விஜயா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 22 வங்கிகளுக்கு தலா ரூ50 லட்சம் முதல் ரூ3 கோடி வரை மொத்தம் ரூ49.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications