இ-மெயில் தமிழன் ‘சிவா அய்யாத்துரை’ நாளை சிவகாசி விஜயம்
சிவகாசி: முதன் முதலில் இமெயிலை உருவாக்கி பயன்படுத்திய தமிழரான சிவா அய்யாத்துரை நாளை சிவகாசி பொறியியல் கல்லூரிக்கு வருகை தர இருக்கிறார்.
‘குடைக்குள் உலகமாக' தொடர்பு கொள்ளும் முறைமையை எளிதாக்கிய இ-மெயிலைக் கண்டறிந்தவர் ஒரு தமிழர் என்பதே நமக்கு மிகவும் பெருமையான விஷயம். தற்போது ‘சைட்டோ சால்வ்' என்ற நிறுவனத்தின் தலைவராக இருக்கும் சிவா, நாளை சிவகாசியில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றிற்கு வருகை தந்து, மாணவர் மத்தியில் உரையாற்ற உள்ளார்.
இது குறித்து அக்கல்லூரி தாளாளர் ஆர். சோலைச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்...

இமெயில் தமிழன்...
உலகம் முழுவதும் தற்போது பெரும்பாலானோர் தகவல் தொடர்புக்கு இ-மெயிலை பயன்படுத்துகின்றனர். இந்த இ-மெயிலை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர். இவர் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள முகவூரைச் சேர்ந்தவர்.

டாக்டர் இ-மெயில்...
டாக்டர் இ-மெயில்' என அழைக்கப்படும் இவரது பெயர் வி.ஏ. சிவா அய்யாத்துரை. இவர் 1980ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லிவிங்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, இ-மெயிலை கண்டுபிடித்தார்.

35க்கும் மேற்பட்ட நூல்கள்...
இதுவரை சிவா அய்யாத்துரை 19 புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்துள்ளார். தற்போது அவர் "சைட்டோ சால்வ்' என்ற நிறுவனத்தின் தலைவராக உள்ளார். கணினி உள்ளிட்டவை குறித்து 35-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.

தொழில் நுட்பப் புதுமைகளின் தேவை...
44 கல்வி சார்ந்த விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில், கல்லூரி மாணவ- மாணவிகள் மத்தியில் "தொழில்நுட்பப் புதுமைகளின் தேவை' என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்' என கூறியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications