ஆந்திரா பந்த்: திருப்பதி கோவிலில் கூட்டமில்லை... 3 மணி நேரத்தில் தரிசனம்

ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்த விவகாரம் ஆந்திராவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலம் பிரிக்கப்பட்டதை கண்டித்து ராயலசீமா, கடலோர ஆந்திராவில் நேற்று ‘பந்த்' போராட்டம் நடந்தது. இதனால் பேருந்து போக்குவரத்து முடங்கியது. ‘பந்த்' காரணமாக திருப்பதிக்கு எந்த பேருந்தும் இயங்கவில்லை.
திருப்பதியில் இருந்து திருமலைக்கு மட்டும் பஸ் போக்குவரத்து நடந்தது. இதனால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் பெருமளவு குறைந்தது. எப்போதும் பக்தர்கள் நெரிசலாக காணப்படும் இடங்கள் வெறிச்சோடி கிடந்தது.
பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் கம்பார்ட்மெண்டுகள் கூட நெரிசல் இன்றி காணப்பட்டது. பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் 2 மணி நேரத்திலும், 300 ரூபாய் சிறப்பு கட்டணம் தரிசன பக்தர்கள் 1 மணி நேரத்திலும் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடிந்தது. தர்ம தரிசனத்துக்கு நின்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்து திரும்பினர்.
நேற்று காலை முதல் மாலை வரை 40 ஆயிரம் பக்தர்களே தரிசனம் செய்தனர்.பக்தர்கள் குறைந்ததால் கடைகளில் வியாபாரமும் மந்தமானது. இன்றும் பேருந்துகள் ஓடாததால் பக்தர்கள் கூட்டம் மேலும் குறைந்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications