ஈமு கோழிப் பண்ணையாளர்களின் சொத்துக்கள் முடக்கம்: அரசு உத்தரவு
சென்னை: முதலீட்டாளர்களின் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றிய ஈமு கோழிப் பண்ணையாளர்களின் சொத்துக்களை முடக்க ஆரம்பித்துள்ளது தமிழக அரசு.
மக்களிடமிருந்து வசூலித்த டெபாசிட் பணத்தைத் திருப்பிச் செலுத்தத் தவறிய ஈமு பண்ணையாளர்களின் சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பான உத்தரவை மாநில அரசின் உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
தொடர் சட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த சொத்து முடக்கம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முடக்கப்படும் சொத்துக்களை ஏலம் விட்டு அதிலிருந்து வரும் பணத்தை டெபாசிட் செய்த மக்களுக்குத் திரு்ப்பித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சுதி ஈமு பண்ணைகளின் சொத்துக்கள் இதுபோல முடக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்திடம் 220 ஈமு கோழிகள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ. 6.60 லட்சமாகும் இந்த கோழிகள் அனைத்தும் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல சுபஸ்ரீ ஈமு பண்ணைகள், ஜிஒன் ஈமு ஜோன் இந்தியா லிமிட்டெட் ஆகியவற்றின் வாகனங்கள், அசையா சொத்துக்கள், குளிர்சாதனப் பெட்டிகள், அலுவலக பர்னிச்சர்கள் ஆகியவையும முடக்கப்பட்டுள்ளன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications