தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு... நாடாளுமன்றம் முன்பு சாட்டையாலேயே அடித்துக் கொண்ட ஆந்திரா எம்.பி
Subscribe to Oneindia Tamil

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆந்திர காங்கிரசை சேர்ந்த எம்.பி-க்கள் 7 பேரும், தெலுங்கானா எம்.பி-க்கள் 4 பேரும் சஸ்பென்ட் செய்யப்படுவதற்கான தீர்மானம் நேற்று நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால் அமளி காரணமாக அத்தீர்மானம் நேற்று நிறைவேறவில்லை.
இந்த 4 தெலுங்கு தேச எம்.பிக்களில் ஒருவரான சிவபிரசாத், நாடாளுமன்றம் முன்பு சாட்டையால் அடித்துக்கொண்டு தமது எதிர்ப்பை பதிவு செய்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
நாடாளுமன்றத்துக்குள்ளேயே சாட்டையால் தம்மை அடித்துக் கொண்டு எதிர்ப்புத் தெரிவிக்கவும் அவர் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications