கொலை குற்றவாளி, காமக்கொடூரன் ஜெய்சங்கரை தப்ப வைத்தது யார்?
பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து கற்பழிப்பு குற்றவாளி ஜெய்சங்கர் தப்பிச் செல்ல அங்குள்ள யாரோ தான் உதவி செய்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பல்வேறு கற்பழிப்பு மற்றும் கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்ட சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள பனங்காட்டூரைச் சேர்ந்த ஜெய்சங்கர்
(36) கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி முதல் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தான்.
இந்நிலையில் அவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சிறையில் இருந்து தப்பியோடிவிட்டான்.

போலி சாவி
ஜெய்சங்கர் அவன் அறைக் கதவை போலி சாவி போட்டு திறந்து சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவன் இருந்த அறையை உள்ளிருந்து திறக்க முடியாது.

பாதுகாவலர்கள்
ஜெய்சங்கரை அந்த அறையில் வைத்து பூட்டுவது, அவனை கண்காணிப்பது ஆகிய வேலையை பாதுகாவலர்களாக பணிபுரியும் ஆயுள் தண்டனை கைதிகள் 3 பேர் செய்து வந்தனர். ஒன்று அவர்களில் ஒருவர் அறையை பூட்டாமல் இருந்திருக்க வேண்டும் அல்லது அவர்கள் அறையை வெளியே இருந்து திறந்துவிட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

பவர் இல்லை, ஜெனரேட்டரும் இல்லை
ஜெய்சங்கர் அறையை விட்டு வெளியே வந்தபோது அதிகாலை 4 மணிக்கு யாரோ மின் இணைப்பு மற்றும் யுபிஎஸ் இணைப்பை துண்டித்துள்ளனர். சிசிடிவி கேமராக்களும் வேலை செய்யவில்லை. மேலும் ஜெனரேட்டரும் வேலை செய்யவில்லை.

சிசிடிவி கேமராக்கள்
பெங்களூர் சிறையில் மொத்தம் உள்ள 40 சிசிடிவி கேமராக்களில் வெறும் 8 மட்டும் தான் வேலை செய்கிறது. அந்த கேமராக்கள் 1996ம் ஆண்டில் வாங்கப்பட்டவை. 10 ஆண்டுகள் தான் அவை உழைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரும்பு கம்பி
ஜெய்சங்கர் சிறையின் 20 அடி சுற்றுச்சுவரை 15 அடி நீள இரும்பு கம்பியைக் கொண்டு கடந்துள்ளான். அவன் அந்த கம்பியின் உதவியோடு ஏறும்போது யாரோ அவன் கீழே விழாமல் இருக்க கம்பியை பிடித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

போலீஸ் உடையில்
ஜெய்சங்கர் போலீஸ் சீருடை அணிந்து தப்பியுள்ளான். அவன் யாருக்கும் தெரியாமல் சீருடையை எடுத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications