எல்.பி.ஜி நேரடி மானியத் திட்டம் அக்டோபர் 1 முதல் தமிழ்நாட்டில் அமல்
சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டருக்கான நேரடி மானியம் வழங்கும் திட்டம் தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி அமல்படுத்தப்படுகிறது.
நடப்பாண்டில் 289 மாவட்டங்களில் நேரடி மானியத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் முதலாவதாக அரியலூர் மாவட்டத்தில் இத்திட்டம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலாகிறது. திட்டம் தொடங்கப்பட்டது முதல் 3 மாதம் வரை மானிய விலையில் சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
அதன் பிறகு 3 மாதங்களுக்குள் ஆதார் எண் பெற்று வங்கிக் கணக்குடன் இணைத்து கொடுத்த பின்னர், சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்
நவம்பரில் மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களிலும், டிசம்பரில் கடலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, சேலம், விருதுநகர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சந்தை விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் பெறலாம்.