தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்.. பரமக்குடியில் அமைதி
பரமக்குடி: தியாகி இமானுவேல் சேகரனின் 56வது நினைவு தினம் இன்று பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தால் பல்வேறு கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் பல்வேறு கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.
இதுவரை எந்தவிதமான வன்முறையும், பிரச்சினையும் இல்லை. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
1957ம் ஆண்டு ஒரு ஏற்பட்ட வகுப்பு மோதலில் ஒரு பிரிவினரால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் இமானுவேல் சேகரன். தாழ்த்தப்பட்ட சமுதாயத் தலைவரான இமானுவேல் சேகரனுக்கு பரமக்குடியில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு ஆண்டுதோறும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் நினைவு நாளன்று அஞ்சலி செலுத்துவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இதில் வன்முறை வெடித்துவருகிறது. உயிர்ப்பலிகளும் ஏற்பட்டுள்ளன.
இதையடுத்து இந்த ஆண்டு மிக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தியாகி இமானுவேல் சேகரனின் குருபூஜை நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பரமக்குடி முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அஞ்சலி நிகழ்ச்சிக்கு வரும் வாகனங்களுக்கம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதலில் இமானுவேல் சேகரனின் சொந்த ஊரான செவ்வூரைச் சேர்ந்த மக்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் திமுக சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதில், முன்னாள் அமைச்சர்கள் சுப. தங்கவேலன், தமிழரசி, முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல் தலைமையில் அஞ்சலி செலுத்தினர். ஆனால் இவர்கள் இரு கோஷ்டிகளாக வந்திருந்தனர்.
இவர்கள் போன பின்னர் தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, சுந்தரராஜன் ஆகியோரது தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து மதிமுக சார்பில் கிருஷ்ணன் எம்.பி. சார்பில் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2011ம் ஆண்டுநடந்த இமானுவேல் சேகரன் நினைவு தினத்தின்போது பரமக்குடியில் பெரும் வன்முறை வெடித்தது. இதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 தலித் மக்கள் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம். இந்த வன்முறை மதுரைக்கும் பரவியதில் அங்கும் பெரும் பதட்டம் நிலவியது குறிப்பிடத்தக்கது.
டூவீலரில் மதுரையிலிருந்து கிளம்பிய 59 பேர் கைது
இதற்கிடையே காவல்துறையின் தடை உத்தரவை மீறி மதுரையிலிருந்து இரு சக்கர வாகனங்களில் பரமக்குடிக்கு கிளம்பிய 59 பேரை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
இந்த மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை முன்னாள் எம்.எல்.ஏவும், மக்கள் விடுதலைக் கட்சித் தலைவருமான முருகவேல்ராஜ் தலைமயில் அவரது ஆதரவாளர்ள் நடத்தினர். ஆனால் தல்லாகுளத்தில் வைத்து இவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
திருமாவளவன் அஞ்சலி
இதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் இன்று இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications