ஜனவரி 1 முதல் வாரத்தில் நான்கரை நாட்கள் மட்டுமே வேலை.. அரசு ஊழியர்களுக்கு அரபு நாடுகளின் குட் நியூஸ்!
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அரசு ஊழியர்களுக்கான வார வேலை நாட்கள் 5 நாட்கள் முதல் நான்கரை நாட்களாக மாற்றியமைக்கப்பட்டு அந்த புதிய நடைமுறை வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகின்றன.
பொதுவாக திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வேலை நாட்களாகவும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களாகவும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒரு சில தனியார் நிறுவனங்களில் இதே நிலை நீடித்து வருகிறது. எனினும் சில நிறுவனங்கள் திங்கள் முதல் சனி வரை வேலை நாட்களாக வகுத்துள்ளன.

ஹப்
இந்த நிலையில் எண்ணெய் வளம் அதிகம் உள்ள வளைகுடா நாடுகள் வர்த்தக, சுற்றுலா மற்றும் வியாபாரம் ஆகியவற்றின் மையமாக இருக்கிறது. இங்கு தற்போது ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை பணி நாட்களாகவும், வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் விடுமுறை நாட்களாகவும் பின்பற்றப்பட்டு வருகிறது.

மனித வளத் துறை
இந்த நிலையில் இந்த நடைமுறையை அந்நாட்டு அரசு மாற்றியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் மனித வளத் துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் அல் அவார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இனி வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை 8 மணி நேர பணியும் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 12 மணி வரை என 4.30 மணி நேர பணியும் நடைமுறைக்கு வருகிறது.

உற்பத்தி அதிகரிக்க
வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு சனி, ஞாயிறு உள்பட 2.5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை தேவைப்பட்டால் வீட்டிலிருந்தபடியே பணியாற்றிக் கொள்ளலாம். உற்பத்தியை பெருக்கவும் வியாபாரத்தை அதிகரிக்கவும் இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே வேளையில் தனியார் நிறுவனங்கள் தங்களது பணிநாளை அவர்களது விருப்பத்திற்கேற்ப அமைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்கள்
முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளான இந்தோனேஷியா, மொராக்கோ ஆகிய நாடுகளில் சனி, ஞாயிறுகளில்தான் வார இறுதி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகிலேயே வாரத்தில் நான்கரை நாட்கள் பணி நேர நடைமுறையை முதல் நாடாக அறிவித்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம். இந்த புதிய நடைமுறை மத்திய கிழக்கு நாடுகளான ரஸ் அல் கைமை, அபுதாபி, ஷார்ஜா, துபாய், புஜைரா, உம் அல் குவைன் ஆகிய பகுதிகளில் பின்பற்றப்படும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications