மாணவியின் கால்ல விழுந்து மன்னிப்பு கேளுங்க! கல்லூரி முதல்வரை மிரட்டிய ஏபிவிபி! அதிர்ந்த போன குஜராத்!
காந்திநகர் : குஜராத்தில் ஏபிவிபி தலைவர் ஜெய்ஸ்வால் பாலிடெக்னிக் கல்லூரி பெண் முதல்வரை மாணவியின் காலில் விழுமாறு கட்டாயப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் எஸ்.ஏ.எல். பாலிடெக்னி என்ற பெயரில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரி ஆண் பெண் என கோ எஜுகேசன் சிஸ்டத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியின் முதல்வராக பெண் பேராசியை ஒருவர் பணியாற்றி வருகிறார்.

ஏபிவிபி மிரட்டல்
இந்நிலையில் குறிப்பிட்ட அந்தக் கல்லூரிக்கு சென்ற இந்துத்வ மாணவர் அமைப்பான ஏபிவிபி எனப்படும்
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தலைவர் ஜெய்ஸ்வால் தலைமையிலான கும்பல் கல்லூரி பெண் முதல்வரை மாணவி ஒருவரின் காலில் விழுமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த வியாழன் அன்று நடந்ததாகக் கூறப்படுகிறது.

காலில் விழுந்து மன்னிப்பு
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. அதில் கல்லூரி பெண் முதல்வர் மாணவியிடம் கைகூப்பியும் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். ஏ.பி.வி.பி தலைவரின் முன்னிலையில் நடந்த இந்தச் சம்பவம் குஜராத் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில், ஜெய்ஸ்வால் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

தலைவர் நீக்கம்
ஏபிவிபி தலைவர் ஜெய்ஸ்வாலின் இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார் ஏபிவிபி அமைப்பின் பொதுச் செயலாளராக இருக்கும் பிரார்த்தனா அமீன். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையே இருக்கும் உறவின் புனிதமான பாரம்பர்யத்தை ஏபிவிபி நிச்சயமாக நம்புகிறது என குறிப்பிட்டுள்ளார்.

கடும் கண்டனம்
ஏபிவிபி தலைவர் ஜெய்ஸ்வால் பெரிய தவறு செய்துவிட்டார். அதற்காக அவரை ஏபிவிபி அமைப்பிலிருந்து நீக்கியிருக்கிறோம் என அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு கூறியுள்ள நிலையிலும் இந்த விவகாரம் இன்னும் ஓயவில்லை. இதனிடையே ஜெய்ஸ்வாலின் இந்த செயலுக்குக் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாவிக் சோலங்கி கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இது ஒரு வெட்கக்கேடான செயல் என மிகக் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications