விவசாய உற்பத்தியாளர் உறுப்பினர்களுக்கு கல்வி கடன் வழங்கும் திட்டம்
சென்னை: விவசாய உற்பத்தியாளர் உறுப்பினர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை அஃரோடெக் விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியது.
நாள் : புதன் கிழமை
தேதி : 14-04-2021
இடம் : அரசூர். விழுப்புரம். காலை 10:30 மணியளவில்.

கொரானா பெரும் தொற்றால் அவதிப்பட்டு வரும் ஏழை எளிய பெண் விவசாயிகள் மற்றும் வேளாண்மை தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் அவதிப்பட்டு வரும் இந்த கால கட்டத்தில் அடுத்து வரும் கல்வி ஆண்டு நெருங்கி வரும் வேளையில் தங்களது பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியுமா !! என்று மன ரீதியாக சோர்வடைந்து உள்ளனர்.
இதனை உணர்ந்த நமது அஃரோடெக் விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் தங்களது உறுப்பினர்களின் துயர் துடைக்கும் வகையில் கல்வி கடன் வழங்கும் திட்டத்தை இந்த தமிழ் புத்தாண்டு அன்று அறிமுகபடுத்த உள்ளது.
மேலும் இந்த திட்டத்தை பற்றி அஃரோடெக் நிறுவனத்தின் முதன்மை இயக்குனர் திரு. மாணிக்கம் அவர்கள் கூறியதாவது :- இந்த திட்டம் முதல் கட்டமாக சுமார் 50 நபர்களுக்கு தலா 10000 வீதம் ரூ. 500000 செலவில் இந்த திட்டம் செயல்படுத்த பட உள்ளது.
இதன் மூலமாக எங்களது நிறுவனத்தின் உறுப்பினர்கள் சுமார் 3000 பேர் பயன்பெறுவார்கள். மேலும் இந்த திட்டம் சுலபமாக திரும்ப செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது..
அஃரோடெக் விவசாய உற்பத்தி நிறுவனம் இதற்கு முன்பு பல நலத்திட்டங்களை செயல் படுத்தி உள்ளது.

குறிப்பாக ஆடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் சுமார் 3000 குடும்பங்களுக்கு விலையில்லா ஆடு வழங்கி தற்சார்பு பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பல நலத்திட்டங்களை விழுப்புரம் மாவட்டத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது.
மேலும் இந்த கல்வி கடன் திட்டம் ஏழை பெண் விவசாயிகள் முகத்தில் மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் ஏற்படுத்திய அஃரோடெக் நிறுவனத்திற்கு பெண் விவசாயிகள் மற்றும் பயனாளிகள் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் நிறுவன முதன்மை இயக்குனர் திரு. மாணிக்கம் அவர்கள் மற்றும் விழுப்புரம் கிளையின் இயக்குனர் திருமதி. சீதா. மற்றும் ஆனந்தபாபு, மோகன் தாஸ் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்..
மேலும் இந்த நிகழ்ச்சி அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் படி சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications