Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1 கோடி பேருக்கு தமிழ் கற்பிக்க இலக்கு! கர்நாடகா சுற்றுலாத்துறை இயக்குனர் ராம்பிரசாத் மனோகர் ஆர்வம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் வசிக்கும் ஒருகோடி தமிழர்களுக்கு தமிழ் கற்று கொடுக்க இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டும் என விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த கர்நாடகா ஐஏஎஸ் அதிகாரியும், அம்மாநில சுற்றுலாத்துறை இயக்குனருமான ராம் பிரசாத் மனோகர் ஆர்வமாக ஐடியா கூறினார்.

கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பவர் ராம்பிரசாத் மனோகர். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தான் இவரது சொந்த ஊர். கடந்த 2010ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்த இவர் கர்நாடகாவில் பல்வேறு துறைகளில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

Aiming to teach Tamil to one crore Tamil people, says Karnataka IAS Officer Ram Prasath Manohar

பல்லாரி மாவட்ட கலெக்டர், பெங்களூர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை கமிஷனர், கர்நாடகா தொழில்துஐற உள்கட்டமைப்ப மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் உள்பட பல பொறுப்புகளை திறமையாக நிர்வகித்து வந்தார்.

இதற்கு முன்பு பெங்களூர் மாநகராட்சி வருவாய் துறை சிறப்பு கமிஷனராக செயல்பட்ட ராம்பிரசாத் மனோகர் இப்போது கர்நாடகா அரசின் சுற்றுலாத்துறை இயக்குனராக பணியாற்றி வருகிறார். அதோடு கூடுதல் பொறுப்பாக மனோகர் பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Aiming to teach Tamil to one crore Tamil people, says Karnataka IAS Officer Ram Prasath Manohar

பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் தான் பெங்களூர் நகர் முழுமைக்கும் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதோடு பெங்களூர் நகரில் நாளுக்கு நாள் மக்கள் தொகை உயர்ந்து வரும் நிலையில் அனைவருக்கும் குடிநீர் வினியோகம் செய்வது என்பது சவாலான காரியமாகும். இந்த சவாலை வெற்றிகரமாக செய்வார் என்ற நம்பிக்கையில் கர்நாடகா அரசு ராம்பிரசாத் மனோகருக்கு அந்த வாரிய தலைவர் பொறுப்பை கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில் தான் ‛‛கர்நாடகாவில் ஒரு கோடி தமிழருக்கு தமிழ் கற்றுக்கொடுக்க இலக்கு நிர்ணயிக்க வேண்டும்'' என அவர் பேசியுள்ளார் . அதாவது கர்நாடகா தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பெங்களூர் அம்பேத்கர் சாலையில் உள்ள இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் கட்டடத்தில் 2வது தமிழ் புத்தக திருவிழா கடந்த 1ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வரும் 10ம் தேதி வரை இந்த திருவிழா நடைபெற உள்ளது.

Aiming to teach Tamil to one crore Tamil people, says Karnataka IAS Officer Ram Prasath Manohar

விழாவின் 3வது நாளில் தமிழ் மொழி திறன் போட்டி, கவிதை, கட்டுரை போட்டி நடத்தி சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதோடு ‛‛தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் தமிழ் வளர்கிறது.. தளர்கிறது..'' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தப்பட்டது. இதையடுத்து 2வது தமிழ் புத்தக திருவிழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இந்த மலரை ராம்பிரசாத் மனோகர் வெளியிட்டதோடு, ரூ.1 லட்சம் மதிப்பிலான புத்தக கூப்பன்களை மாணவர்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த வேளையில் தான் கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு தமிழ் மொழியை அனைவரும் கற்று கொடுக்க இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டும் என்றார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: ஜெர்மனி மக்கள் தங்கள் நாட்டு மொழியை குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லி கொடுக்கின்றனர். அதேபோல் கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்றுக்கொடுக்க முயற்சி செய்வது இல்லை. இனி ஒவ்வொருவரும் தங்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்று கொடுக்க வேண்டும். தமிழில் பேசுவதாலும், எழுதுவதாலும் மட்டுமே மொழியை வளர்க்க முடியும். கர்நாடகாவில் ஒரு கோடி தமிழர்ளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க இலக்கு நிர்ணயிப்போம்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+